சென்னை,
கோயில் ஊழியர்களுக்கு ரூ1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.
அரசு பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்குவது குறித்து வெளியிடப்பட்டுள்ளது. அது போலவே பொங்கல் கருணைக் கொடை ரூ, 1,000 முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்பட முதுநிலை மற்றும் முதுநிலையல்லாத அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.
2019-20 ஆம் ஆண்டில் 240 நாள்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ. 1,000-மும், 2019-20 ஆம் ஆண்டில் 6 மாதத்திற்கு மேல் 240 நாள்களுக்குள் பணியாற்றியவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் கருணைக் கொடை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.